கோயில் உண்டியல் பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை தேரடி தெருவில் பிரசித்தி பெற்ற முப்பிடாதி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.கோயிலுக்கு உள்ளே ஒரு உண்டியலும், வெளியே ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவில் இந்த கோயிலுக்குள் புகுந்த சில மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மறுநாள் காலை கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.