மலேசியா வாகும் தேஜஸ்

பரதத்தில் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு நட்பு நாடுகளுக்கு தேஜாஸ் போர் விமானத்தை விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலேசிய விமானப்படை குழு தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய பாரதம் வர உள்ளது. பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்த சோதனைகள் நடைபெற உள்ளது. மலேசிய விமானப்படைக்கு இத்தகைய 12 இலகுரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. மலேசியா இதனை வாங்கும்பட்சத்தில், பராமரிப்பு, சரிபார்ப்பு மற்றும் நடவடிக்கைகள் மையம் ஒன்றை மலேசியாவிலேயே அமைத்து தரவும் பாரதம் முன்வந்துள்ளது. இதனால் மலேசியா விமானங்களை இங்கு கொண்டு வந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அங்கேயே அவற்றை செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.