தஞ்சை மதமாற்ற பிரச்சாரம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் பெருமாள் என்பவர் அவருடன் பணி செய்யும் ஊழியர்களிடம் மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு, ‘நாம் அனைவரும் ஏசுவின் பிள்ளைகள், நமக்கு அவரை பிடிக்காததால் கஷ்டப்படுகிறோம், ஏற்கனவே சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தேன். எனக்கு வட்டி இல்லாமல் 3 லட்சம் பணம் கொடுத்தார்கள்’ என்று பேசி மதம் மாறச் சொல்லி நெருக்குதல் கொடுத்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன் அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையரையும் கேட்டுக்கொண்டுள்ளன.