இலங்கை அவசர நிலை

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. அவர்களின் மொத்த அன்னிய செலவாணி கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டது. இதனால், உணவுப் பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோருக்கு கடும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இவற்றை கடனுக்கு வாங்கி நிலைமையை சமாளிக்க வேண்டிய அவசியம் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.