சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபோது ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முகாம்களில் மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து கபசுர குடிநீர் வினியோகத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 400 டன் கபசுர குடிநீர் சூரணம் தயாரித்து அரசுக்கு வழங்கினோம். தற்போதும் போதுமான அளவு தயாரித்து வழங்க தயாராக உள்ளோம் என்று தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனம் தெரிவித்துள்ளது.