சேவைத்துளிகள்

சேவாபாரதி தாம்பரம் மாவட்டம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் வளவந்தாங்கல் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு ஆறு ட்யூப் லைட்டுகள், நான்கு மின்விசிறிகள் வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும், அந்த கிராமத்தில் மருத்துவரோ மருந்துகடைகளோ இல்லாத காரணத்தால் அவர்களின் அவசரத் தேவைக்கு மருந்துகளுடன் கூடிய ஒரு முதலுதவி பெட்டியும் வழங்கப்பட்டது. அந்த கிராமத்தில் வெகுகாலமாக  பெண்களுக்கான கழிவறைகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்து, அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு, அங்குள்ள சமுதாய நல கூடத்திற்கு அருகில் பெண்களுக்காக இரண்டு கழிவறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டன. சிட்லப்பாக்கம் இரண்டாவது முக்கிய சாலையில் உள்ள கந்தன் இஸ்திரி கடைக்கு அருகில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. அந்த இஸ்திரி கடையை நடத்தி வரும் கந்தனின் சேவை மனதைப் பாராட்டி அவருக்கு இஸ்திரி பெட்டி ஒன்று வழங்கப்பட்டது.