மூத்த அரசியல்வாதி கைது

முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், டீக்கடையில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் திரவங்கள் கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. முஸ்லிம்கள் உணவின் மீது எச்சில் துப்பிய பிறகே பரிமாறுகின்றனர். அவர்களின் எச்சிலை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என பேசியிருந்தார் கேரள மூத்த அரசியல்வாதியான பி.சி. ஜார்ஜ். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முஸ்லிம்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக கேரள காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, ஜார்ஜை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். இனிமேல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று ஜார்ஜ் வாக்குறுதி அளித்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த பி.சி. ஜார்ஜ் பல்வேறு கட்சிகளுக்கு தாவினர். கடந்த 2019ல் கேரள ஜனபக்ஷம் என்ற கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.