அயோத்தியில் சாது கொலை

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ஹனுமான் காரி கோயிலின் பூஜாரியான மஹந்த் கன்ஹையா தாஸ் என்ற சாது, சில மர்ம நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் சரண் பாதுகா கோயிலின் கோசாலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாகா சாதுக்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும், பொதுமக்களும் சரண் பாதுகா கோயிலில் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில், ஸ்ரீராமர் ஆலயம் நிர்மாணிப்பதில் முக்கிய நபராக மஹந்த் கன்ஹையா தாஸ் இருந்ததுடன், பசாந்தியா பட்டியின் குல்ச்சமன் பாக் தலைவராகவும் சாது மஹந்த் இருந்துள்ளார். தனிப்பட்ட பகைமையே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த கொலைக்கு பின்னால் உள்ள மற்ற சாத்திக்கூறுகளையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறை உயரதிகாரி வி.பி. சிங் தெரிவித்துள்ளார்.