ஆர்.டி.ஜி.எஸ் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காரணத்தால், வருகிற 18 ஆம் தேதி, ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை, 14 மணி நேரம் பணபரிவர்த்தனை ஆர்.டி.ஜி.எஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியாது. வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக  முன்னதாகவே பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம் நெப்ட் முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.