ஆர்.எஸ்.எஸ் தலைவர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு

டெல்லியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாமாக உள்ள டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசியை கஸ்தூரிபா காந்தி மார்க் மசூதியில் சந்தித்து பேசினார். நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்த முஸ்லிம் அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இடையேயான இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. முன்னதாக, டெல்லியில் முஸ்லிம் அமைப்பின் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து பேசினர்.  பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்ட நுபூர் சர்மா விவகாரத்தை தொடர்ந்து, இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா (ஓய்வு), ராஷ்டிரிய லோக்தளம் தேசிய துணைத் தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.