ரோஹிங்கியாக்கள் கைது

உத்தரபிரதேசத்தில் போலி பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் வசித்து வந்த மூன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது பாரூக், முகமது சுபைர், ஷாஹித் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்கள் மாட்டிறைச்சி கூடங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. ஐந்து லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. லக்னோவில் இருந்து செயல்படும் ராணுவ புலனாய்வு அமைப்பு கொடுத்த தகவலையடுத்து உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படை இவர்களை கைது செய்துள்ளது.