பாகுபாடுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்; மோகன் பகவத்

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும். பாகுபாடுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.