படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி

கோத்தகிரி அருகே குருக்கத்தி கிராமத்தை சேர்ந்தவர் மணி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவரின் மனைவி மீரா. இந்த தம்பதியின் மகள், ஜெயஸ்ரீ பள்ளி படிப்பை கோத்தகிரி தனியார் பள்ளியில் முடித்தார். கோவையில் இன்ஜினியரிங் படித்த இவர், சில மாதங்கள் ஐ.டி., துறையில் பணிபுரிந்துள்ளார். பின், தென்னாப்பிரிக்கா சென்று விமான பயிற்சிக்கான படிப்பை முடித்து, தற்போது விமானியாகி உள்ளார். இவருக்கு படுகர் சமுதாயம் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெயஸ்ரீ கூறுகையில், ”நான் விமானியாக வேண்டும் என்பதற்கான பயிற்சி பெற தென்னாப்பிரிக்காவுக்கு எனது பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த சாதனைக்கு அவர்கள் தான் காரணம். படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.