ஹிந்து தேசமாக அறிவிக்க கோரிக்கை

பாரதத்தை உடனடியாக ஒரு ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும்’ என கேரள சட்டமன்ற உறுப்பினரான பி.சி ஜார்ஜ் கோரிக்கை வைத்துள்ளார். கேரளா, பூஞ்சர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவான பி.சி.ஜார்ஜ், கேரளாவின் தொடுபுழாவில் உள்ள ‘அதிதூர ஊரக வளர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கோரிக்கை வைத்தார். மேலும், ‘பாரதத்தில் நடைபெறும் லவ் ஜிஹாத் உட்பட பல்வேறு வகுப்புவாத பிரச்சனைகளை எதிர்க்க இது ஒன்றுதான் சிறந்த வழி. வரும் 2030 க்குள் பாரதத்தை ஒரு முஸ்லீம் நாடாக மாற்றவேண்டும் எனும் நோக்கில் சில எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வந்தன. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவர்களின் இந்த தேசவிரோத சதிக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற சோசலிச தேசமாக கற்பனை செய்துவிட்டனர். ஆனால் இன்று மதச்சார்பின்மை என்பதன் உண்மைப் பொருள் இவர்களால் திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டது’ என கருத்து தெரிவித்தார்.