மரத்திற்கு மறுவழ்வு

திருப்பூரில் உள்ள காதர்பேட்டையில், கழிவுநீர் கால்வாய் பணிக்காக, இருபது வயதுடைய அரச மரம் அகற்றப்பட வேண்டியிருந்தது. திருப்பூர் பின்னலாடை துறையினரால் நடத்தப்படும், ‘ஸ்ரீபுரம் அறக்கட்டளை’ இந்த மரத்தை, மறுநடவு செய்வதற்கான அனுமதியை, மாநகராட்சியில் இருந்து பெற்று, நவீன தொழில்நுட்ப உதவியுடன் சேதமின்றி மரம் வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்டு, ஜெய்வாபாய் பள்ளி மைதானத்தில் மறுநடவு செய்யப்பட்டது. இதேபோல, திருப்பூர் டவுன்ஹாலில், அகற்றப்பட உள்ள இரண்டு அரச மரங்களையும் பெயர்த்தெடுத்து, மறு நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி தெரிவித்தார்.