காங்கிரசுக்கு பின்னடைவு

கோவாவின் முன்னாள் முதல்வரான ரவி நாயக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது எம்.எல்.ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இது விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கோவா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில் ரவி நாயக்கின் இரண்டு மகன்களும் பா.ஜ.க,வில் இணைந்தனர். முன்னாள் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் மூன்றாகக் குறைந்துள்ளது.