கலவரம் தூண்டும் இடதுசாரிகள்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் பல்கலைக் கழகங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த பல்கலைக் கஸ்ழகத்தை சேர்ந்த இடதுசாரி மாணவர் அமைப்பினர், உத்தர பிரதேசம், அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட 29வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ஜே.என்.யு வளாகத்தின் கங்கா தாபாவில் இரவு 8:30 மணியளவில் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக சந்திரபாகா விடுதியை சென்றடைந்தனர். பிறகு, அயோத்தியில் அதே இடத்தில் அந்த கட்டடத்தை மீண்டும் எழுப்ப வேண்டும் என கோஷங்களை எழுப்பியதுடன் சர்ச்சைக்குரிய பல கருத்துகளையும் பேசினர்.