சட்டவிரோத குத்தகை முறியடிப்பு

அச்சரப்பாக்கம் ஒன்றியம் பாபுராயன்பேட்டை விஜய வரத பெருமாள் கோயில் சொத்து 900 ஏக்கரில் 210 ஏக்கர் குத்தகை விடுவதாக ஹிந்து அறநிலையத்துறை அறிவித்தது. இதை இந்து முன்னணி கண்டித்து முற்றுகை போராட்டம் அறிவித்தது. உடனே அறநிலையத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். கோயில் நிலம் விவசாயத்திற்கு மட்டுமே குத்தகைக்கு விடுவதாக ஒப்புக்கொண்டனர். இதனால் பல ஆயிரம் கோடி கோயில் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது.