ரபேல் இன்று வருகை

பாரத ராணுவத்துக்கு பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ரூ. 59 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலையில் முதல்கட்டமாக ஐந்து விமானங்கள் பாரதத்திற்கு வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து, நவம்பரில் மூன்று விமானங்கள், இந்த ஆண்டு ஜனவரியில் மூன்று விமானங்கள் வந்தன. நான்காவது கட்டமாக, மூன்று ரபேல் போர் விமானங்கள் இன்று காலை பிரான்சில் இருந்து கிளம்பி, ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு, இரவு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப் படை விமானம், ஓமன் வளைகுடா பகுதியில் நடுவானில் முன்பு போலவே வழங்க சம்மதித்துள்ளது. இந்த மூன்று விமானங்களுடன் சேர்த்து, நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை, 14ஆக உயரும்.