ஹிந்து முன்னணி போராட்டம் வெற்றி

பங்குனி உத்திரத் திருநாளன்று கொரானாவை காரணம் காட்டி  சேலம் ஊத்துமலை முருகன் கோயில் அறிவிப்பின்றி மூடி வைக்கப்பட்டது. இந்த கோயிலை திறக்க கோரி இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ் அதிகாரிகளிடம் பேசி கொண்டிருந்தபோது, அங்கே வந்த தி.க, தி,மு,கவினர், சந்தோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் ஹிந்து முன்னணியின் தளரா முயற்சியால், மாலை பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்பட்டது.