ஸ்ரீராமர் கோயில் நம் பிறவிப் பேறு

பல நூற்றாண்டு கனவு தற்போது நிறைவேறுகிறது. ஆம், சுமார் 500 வருட காத்திருப்புக்கு பிறகு ஸ்ரீராமபிரான் அவதரித்த அயோத்தியில், அவருக்கான பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்படுகிறது. பல தலைமுறைகளுக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு நமக்கு தற்போது கிடைத்துள்ளது.

ராமர் ஆலயம் அமைப்பதற்கான நிதி சேகரிப்பு பாரதம் முழுவதும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிதி சேகரிப்பு வரும் பிப்ரவரி 28ல் நிறைவுபெறவுள்ளது. ராமர் ஆலயம் அமைவதற்கு பலரும் மனமுவந்து தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதில் நம் பங்களிப்பும் சிறிதளவு இருக்க வேண்டாமா, ஸ்ரீராமருக்கு அணிலாக உதவ நமக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை தவற விடலாமா!?

நிதி சேகரிப்பு முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. எனவே உடனடியாக நாமும் நம் பங்களிப்பை வழங்குவோம். ஸ்ரீராமனின் அருள் பெறுவோம். நிதி சேகரிக்கும் அன்பர்கள் உங்கள் இல்லம் தேடி வரும்பொழுது, நீங்கள் நிதி வழங்கலாம் அல்லது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் வங்கி கணக்கிலும் நேரடியாக செலுத்தலாம்.