ஸ்ரீராமர் பெயரில் விமான நிலையம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வரத்து அயோத்தியில் அதிகரிக்கும். இதனையொட்டி, விரைவில் மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தலமாக மாறவுள்ள அயோத்தியின் விமானநிலையத்துக்கு ஸ்ரீராமரின் பெயரை சூட்டவும், அதற்கு பன்னாட்டு விமான நிலைய அந்தஸ்து வழங்கவும் உத்தரபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. டிசம்பர் 2021-ல் விமான நிலையம் தயாராகி விடும் என்று உ.பி. அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான அறிக்கையை விரைவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் உ.பி அரசு சமர்பிக்க உள்ளது.