ஸ்டாலினுக்கு ஏழு கேள்விகள்

மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் ஏழு திட்டங்களை தங்கள் கட்சியின் ஏழு தொலைநோக்கு திட்டங்கள் என்று பெருமையாக தேர்தல் வாக்குறுதியாகத் தரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தன்னுடைய ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரா என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பி உள்ளார்.

* நில அபகரிப்புக்கு பெயர் பெற்ற தி.மு.க. இனிமேல் நில அபகரிப்பு செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா?

* ஊழலில் திளைத்த தி.மு.க. இனிமேல் ஊழல் செய்ய மாட்டோம் என்று கூற முடியுமா?

* கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டோம் என்று கூற முடியுமா?

* ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா?

* தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அல்லது குறைந்தபட்சம் கட்சியின் தலைவராக நியமிக்க தயாரா?

* பெண் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் என்று அறிவித்துள்ள ஸ்டாலின் தங்கள் கட்சியின் பெண் சட்டமன்ற வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வாரா?

* வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்ற தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வாரிசு அரசியலை முன்னெடுக்க மாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பாரா?

இக்கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளிப்பாரா…?