பஞ்சர் ஒட்டுபவரும் தலைவராகலாம்

குஜராத், அம்ரேலி மாவட்டம், பக்சராவில், பஞ்சர் ஒட்டும் தொழில் செய்பவர் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரேஷ் என்ற ஹிந்துகுமார் கிம்சுரியா (25) இளம் வயதில் நகராட்சி தலைவரானவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கிம்சுரியா பல வருடங்களாக பஞ்சர் ஒட்டும் கடையை நடத்தி வருகிறார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர், ‘சிறு வயதிலிருந்தே நகராட்சி தலைவராக வேண்டும் என்று கனவு கண்டேன். அது இன்று நனவாகி உள்ளது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.