இப்படிகூட மொழிபெயர்க்கலாமா !!!

 புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அப்போது, ஒரு வயதான மீனவ சமுதாய பெண், மழை, சூறாவளி வந்தபோது, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தங்கள் பகுதிக்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் குற்றம்சாட்டினார். இதை மொழிபெயர்த்த நாராயணசாமி, ‘நிவர் புயலின்போது மீனவர்களை நான் நேரில் சந்தித்து நிவாரணம் அளித்ததைதான் அந்தப் பெண் கூறுகிறார் சார்’ என ராகுலுக்கு தமிழ் தெரியாது என்பதால் இந்த குற்றச்சாட்டை ஆங்கிலத்தில், தனக்கு சாதகமாக மொழிபெயர்த்து ராகுலிடம் கூறினார்.