வீர சாவர்க்கர் புத்தகம் வெளியீடு

நவம்பர் 28, 2021 அன்று கொச்சியில் மத்திய ஆர்.டி.ஐ ஆணையரான உதய் மஹூர்கர் எழுதிய ‘வீர சாவர்க்கர் பிரிவினையைத் தடுத்த மனிதர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘வீர சாவர்க்கர் ஒரு வலிமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர். வீர சாவர்க்கருக்கு எதிராக தொடர்ந்து பொய்கள், அவதூறுகளை பரப்புபவர்களுக்கு மஹூர்கரின் புத்தகம் தகுந்த பதில் அளிக்கும். நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுடன் போராடியதற்காக அவர் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானார். முஸ்லிம்களும் ஹிந்துக்களும் தங்கள் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் கைகோர்க்க வேண்டும்’ என பேசினார். கேரளாவின் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் புத்தக வெளியீட்டு பிரிவான குருக்ஷேத்திர பிரகாஷனால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. ராஷ்ட்ர கதா தலைவர் பாரத் பூஷன், கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைவர் மது எஸ்.நாயர், உதய் மஹுர்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.