தலைமறைவான பாதிரி கைது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடத்தின. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை சர்ச் பங்குத் தந்தையுமான பாதிரி ஜார்ஜ் பொன்னையா, பாரதமாதா, பூமித்தாய் என ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் தெய்வங்கள், பாரத மக்கள் நேசிக்கும் தாய்மண், தேசத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசினார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை என கேவலப்படுத்தினார். இது குறித்து ஹிந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பாதிரி பொன்னையா தலைமறைவானார். மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் தலைமறைவாக இருந்த பாதிரியை காவல்துறை கண்டறிந்து கைது செய்தது.