தரம் கெட்ட நெல்லை கண்ணன்

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை சோலிய முடிங்க என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்துள்ள அவர், நெல்லையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, பேட்டை மல்லிமார் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, மோடியை கொன்றால் என்ன? என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் அவர், உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இவரை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.