பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்

பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள கச்சார் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,834 வாக்குச்சாவடிகளில், 201 வாக்குச்சாவடிகள், முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இதனை செய்திருப்பதாக மாவட்ட துணை ஆணையர் கீா்த்தி ஜல்லி தெரிவித்தார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இந்த மாவட்டத்தில் 10 வாக்குச்சாவடிகள் மட்டும்தான் பெண் அதிகாரிகள் நிர்வாகத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.