கருத்துக் கணிப்பு

ஐ.ஏ.என்.எஸ், சி-ஓட்டர்ஸ் அமைப்புகள் இணைந்து, உத்தரபிரதேசத்தில், 15 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டவர்களிடம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியது. பாரதத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட அந்த மாநிலத்தில் சுமார் 53 சதவீதம் பேர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசில், தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறியிருக்கின்றனர். குற்றவாளிகள், ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் போன்றோரிடம் இருந்து தாங்கள் காக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 35.3 சதவீதம் பேர் தாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறியுள்ளனர். 11.8 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.