தப்பித்த நடிகை

மேற்கு வங்கம், அசன்சோலைச் சேர்ந்த திருணமூல் கட்சி வேட்பாளரான நடிகை சயோனி கோஷ் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், அவரது சொந்த கட்சி உறுப்பினர்களே அவரிடம் தவறாக நடக்க முயன்றனர். இதனால் பயத்தில் அவர், ​​“எக்டோம் பிச்சா தாகுன் (என்னிடமிருந்து விலகி இருங்கள்)” என்று கத்திக்கொண்டே அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரம் தப்பியோடினார். பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை காக்க வேண்டியிருந்தது. ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சி இந்த செய்தியை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. முன்னதாக, சிவராத்திரி அன்று சயோனி கோஷ்,  சிவலிங்கத்தின் மீது ஆணுறை அணிவிப்பதை போல ஒரு  படத்தை வெளியிட்டு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.