மூடி மறைக்கப்படும் பைன்ஸா கலவரம்

மகாராஷ்டிரா தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள பைன்ஸாவில், 50 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த நகரின் நகராட்சி நிர்வகிப்பது தீவிர இஸ்லாமிய ஆதரவாளரும் ஹிந்துக்களை பகிரங்கமாக வெறுப்பவருமான அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியிடம் உள்ளது. இங்கு கடந்த சிவராத்திரி அன்று முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய கோர தாக்குதலில் ஏராளமான ஹிந்துக்கள் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது ஹிந்துக்களை முழுவதுமாக அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள்  போட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதிதான் என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் நடைபெறுவதால் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் வெளியில் தெரிந்தால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என கருதும் ஒவைசியின் கட்சியினர் எந்த ஊடகங்களையும் ஊருக்குள் வராமல் தடுத்துள்ளனர். இதற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகரின் தலைமையிலான டி.ஆர்.எஸ் கட்சியும் காவல்துறையும் உடந்தையாக செயல்படுகிறது.  ஒவைசி தமிழகத்திலும் கால் பதிக்க தினகரனின் அ.ம.மு.கவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.