ஆள் கடத்தலில் மத போதகர்

வியாசர்பாடி அருகே இயேசு கிறிஸ்து வழிபாட்டு சபை என்ற பெயரில் சர்ச் நடத்தி வரும் மோகன் தாஸ் தனது காரில் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது,  அருகே சென்ற லாரி‌ காரின் மீது லேசாக உரசியதில் சேதம் ஏற்பட்டுள்ளது. காரின் சேதத்துக்கு ரூ. 30,000 இழப்பீடு தருவதாகக் லாரி உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால் அதை  மறுத்த மத போதகரும், உடன் வந்தவர்களும், லாரி ஓட்டுநரை மாதவரத்திற்கு வலுகட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் ரூ. 30,000 தந்தால்தான் விடுவோம் என கடத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து லாரி உரிமையாளர் தந்த புகாரில் மோகன்தாசும் உடன் வந்தவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றம் அழைத்து செல்லும்போது அதை தடுக்கும் விதமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் போராட்டம் செய்துள்ளனர்.