செந்தில் பாலாஜி மீது பா.ஜ.க புகார்

‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், 11 மணிக்கு ஸ்டாலின் பதவியேற்றால், 11:05 மணி முதல் மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம். அதிகாரிகள் தடுக்க மாட்டார்கள், தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள்’ என மணல் திருட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தும், அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசிய வீடியோ பாரதம் முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சுக்கு பொதுமக்களும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி புகார் அளித்துள்ளார்.