கொரோனாவுக்கு புது காரணம்

‘பாரதத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலுக்கு ஹிந்துக்களுக்காக பரிந்து பேசும் யதி நர்சிங்கானந்த் தான் காரணம். ஹிந்துக்கள் இஸ்லாமிற்கு மாறுவது மட்டுமே இதற்கு தீர்வு. இதனை டெல்லி அரசு உணர வேண்டும்’ என்று ஒரு விசித்திரமான காரணத்தை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் வங்க தேசம், தினாஜ்பூரை சேர்ந்த ஒரு முஸ்லிம் மௌல்வி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அண்டை நாடான வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சனைக்கு தடுப்பூசி முதல் மருந்துகள்வரை பாரதம் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.