புதுமையான யோசனை

நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெவ்வேறு துறைகளுக்கு, வெவ்வேறு வேலை நேரம் என்ற திட்டத்தை அறிவிக்கலாம் என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘சி.ஏ.ஐ.டி.,’ பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து, இவ்வமைப்பு தெரிவித்து உள்ளதாவது: அதாவது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, இரவு நேர முழு ஊரடங்கு என்று தடை விதிப்பதற்கு பதிலாக, அரசு, தனியார் துறை அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என்றும், கடைகள், சந்தைகள் போன்றவை காலை 11 மணி முதல் மாலை, 5 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கலாம். இதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப, வேலை நேரத்தை மாற்றி அறிவிக்கலாம். இப்படி செய்தால் பொருளாதார மீட்சி பாதிக்கப்படாது என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.