எதிர்மறை ஊடகவாதிகள்

வாஷிங்டன் போஸ்ட், டைம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதும் சார்பு பத்திரிகையாளர் ராணா அயூப். இந்த பெண் நேற்று தனது டிவிட்டரில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக காலையிலிருந்து 70 நபர்கள் உத்திரபிரதேசம், அலிகாரில் இறந்து விட்டதாக தனது உள்ளூர் நிருபர் தெரிவிப்பதாக செய்தி பதிவிட்டார். இது குறித்து அறிந்த உத்திரபிரதேச முதல்வரின் முதன்மை செய்தி தொடர்பாளர் ஷலப் மணி திரிபாதி, ‘இப்படியான தகவல்கள் ஏதுமில்லை, அவ்வாறு எதேனும் இருந்தால் உடனடியாக அதனை சிரமம் கொண்டு பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என பதில் அளித்திருந்தார். இதனால் தன் சாயம் வெளுத்ததை அறிந்த ராணா அயூப், அந்த பதிவினை நீக்கிவிட்டார். இவரது டிவிட்டர் பதிவுகள் அனைத்தும் ஹிந்துக்களுக்கும் பா.ஜ.கவுக்கும் எதிராகவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.