என்.டி.டி.வி மீது புதிய குற்றச்சாட்டு

என்.சி.பி.சி.ஆர், எனும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம்,  டெல்லி காவல்துறையின் இணை கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் அறக்கட்டளையான ‘சைல்ட்லைன் இந்தியா’ எனும் அமைப்பின் பெயரைத் தவறாக பயன்படுத்தியுள்ளது என்.டி.டி.வி நிறுவனம். எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்காக என பொய் கூறி, தனது சொந்த நலனுக்காக, சட்டவிரோதமாக பணத்தை திரட்டியுள்ளது என்.டி.டி.வி. என்.டி.டி.வியின் இந்த நிதி திரட்டுதல் குறித்து அறக்கட்டளையோ அமைச்சகமோ கூட அறிந்திருக்கவில்லை. எனவே இது ஒரு மோசடி என கூறுவதைத் தவிர வேறில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.