தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்

தேசவிடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் தொடங்கிவைத்தார். பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கண்காணிக்கும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நெறிமுறைகளையும் வகுக்கும். பிரதமரின் தலைமையின் கீழ் பழங்குடியினர் நலன் அமைச்கத்தின் சாதனைகள் குறித்த கண்காட்சியும் துவக்கை வைக்கப்பட்டது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தினர். விஷேஷ நிகழ்ச்சியாக பழங்குடியினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.