நேஷனல் ஹெரால்டு வழக்கு

ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த, ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, ரூ. 90.25 கோடி கடன் கொடுத்தது. பின்னர் இந்நிறுவன பங்குகளை சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் முறைகேடாக கையகப்படுத்தியது. இதனை வெளிக்கொண்டு வந்த பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி, நீதிமன்றத்தில், சோனியா, ராகுல், ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், புதிய சாட்சிகளை முன்வைக்க சுப்ரமணிய சுவாமி  விடுத்த கோரிக்கையை டில்லி நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, சுவாமியின் மனு தொடர்பாக, சோனியா, ராகுல் உள்ளிட்டோர், ஏப்ரல் 12க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.