நரசிம்மர் கோயில் கொள்ளை

அசாம், கரிம்கஞ்சில் உள்ள பாலியாவில் உள்ள நரசிம்ம கோயிலில் இரவில் புகுந்த ஒரு மர்ம கும்பல், பூஜாரியையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு தூணில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். கோயிலில் உள்ள இறைவனின் தங்க ஆபரணங்கள், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதுடன் அந்த ஏழை பூஜாரியிடம் இருந்த ரூ. 1,200 பணம்கூட அவர்களால் விட்டுவைக்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டது.  பூஜாரியின் மகளை கடத்திவிடுவோம் என்றும் அந்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த இடம் பாரதம் – வங்கதேச எல்லையில் உள்ளது. எல்லையைத் தாண்டி வந்து கொள்ளையடிப்பது தற்போது அதிகரித்துள்ளது என்றும் அவர்களுக்கு உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவாக செயல்படுவதாகவும்  உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர் என தி சென்டினல் என்ற அசாமிய செய்திதாள் தெரிவித்துள்ளது.