கோயிலை அவமதித்த மர்ம நபர்கள்

ஜூலை 16, 2022 அன்று, உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் பகுதியில் உள்ள ரசூலாபாத் கிராமத்தில் ஒரு சிவன் கோயிலுக்குள் சில மர்ம நபர்கள் இறைச்சி துண்டுகளை வீசியுள்ளனர். கோயிலை இழிவுபடுத்தும் இந்த முயற்சி அங்குள்ள மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி ஹிந்து அமைப்பினர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மக்களை அமைதிப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இதனிடையே இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் சிலர் இறைச்சி கடைகளுக்கு தீ வைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் சந்தையையும் போலீசார் மூடியுள்ளனர்.