ராகுலுக்கு பதிலளித்த அமைச்சர்

  புதுச்சேரியில், மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் இல்லை’ என்று கூறினார் ராகுல். இவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ‘இத்தாலியை விட்டு வெளிவர, ராகுல் மறுக்கிறார். அங்கு தான், மீன்வளத்துறைக்கு தனியான இலாகா இல்லை. அது, வேளாண், வனத்துறை கொள்கை என்ற அமைச்சகத்தின் கீழ் வருகிறது. நம் அமைச்சரவையை பொறுத்தவரை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறையை ஒன்றிணைத்து, தனி அமைச்சகத்தை, பிரதமர் மோடி, 2019ல் உருவாக்கினார். அத்துறைக்கு அமைச்சராக நான் பொறுப்பு வகிக்கிறேன். ஒரு கட்சியின் பொறுப்புமிக்க தலைவரான ராகுலுக்கு இந்த விபரம் கூட தெரியாதது ஆச்சரியம் அளிக்கிறது. விவசாயிகளை அவர் தவறாக வழிநடத்துகிறார். உலக அரங்கில், நம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார். என தன் ‘டுவிட்டர்’ சமூகவலைதள பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ராகுலின் இத்தாலிய இயற்பெயரான ‘கேரோ ரவுல்’ என்ற பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.