ராணுவ அதிகாரிகள் மாநாடு

குஜராத், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவ அதிகாரிகளுக்கான மூன்று நாட்கள் மாநாடு கடந்த வியாழன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இம்மாநாட்டின் இறுதி நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி நரவனே உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.