மெகா பேட்டரிகள்

2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் அளவுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மிகப் பெரிய மின்கலன் அமைப்புகள் தேவை. இதற்காக, சோதனை முயற்சியாக 1,000 மொகாவாட் திறனுள்ள மின்கலன்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை கோர அமைச்சகத்தின், இந்திய சூரிய மின்சக்தி கார்பரேஷன் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஏலத்துக்கு முந்தைய கூட்டம், அக்டோபர் 28ல் நடைபெறவுள்ளது. பல தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றபின், ஒப்பந்தத்துக்கான அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.