மயூரின் மனிதாபிமானம்

சில நாட்களுக்கு முன் மும்பை வாங்கனி ரயில் நிலையத்தில் நடைமேடையில் இருந்து கீழே விழுந்துவிட்ட ஒரு கண் பார்வையற்ற தாயின் குழந்தையை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் ஓடிவந்து மீட்ட ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவை பாராட்டி, ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், அவருக்குப் புதிய ஜாவா பைக் ஒன்றை பரிசளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர அவருக்கு பலரும் வாழ்த்துகளுடன் பரிசுகளும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கண் பார்வையற்ற பெண்ணின் ஏழ்மை நிலையை நேரில் கண்ட மயூர், தனக்குக் கிடைக்கும் பரிசுகள், பணம் ஆகியவற்றில் பாதியை அவர்கள் குடும்பத்திற்கு தர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.