மமதாவின் அடுத்தடுத்த நாடகம்

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படும், குறிப்பாக தான் போட்டியிடும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைய நேரிடும் என்பதால் பயத்தில் உள்ள மமதா பேனர்ஜி,  காரில் ஏற முயன்ற போது அடையாளம் தெரியாத சிலர் தன்னை தள்ளிவிட்டனர். இதனால் காலில் காயம், எலும்பு உடைந்து விட்டது என கூறி மக்களின் அனுதாப ஓட்டைப் பெற நாடகமாடினார். மருத்துவமனையில் பெரிய மாவுக்கட்டு போட்ட காலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மமதா, இரண்டே நாட்களில் சுளுக்கு போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு போடும் ‘கிரிப் பாண்டேஜுடன்’ மருத்துவமனையில் இருந்த வீல் சேர் மூலம் வீட்டிற்கு சென்றார். இரண்டே நாளில் உடைந்த எலும்பை ஒட்டவைத்து சரிசெய்த மருத்துவரை காண இந்த உலகமே ஆர்வமாக இருப்பதாக நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.