தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சமீபகாலமாக குறைந்து வருவது, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள், தங்கத்தில் தொடர்ந்து முதலீடுகளைச் செய்துவருகின்றனர். தங்கத்தை அடிப்படையாக கொண்டு பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளில் ஒன்றான, தங்க இ.டி.எப் முதலீட்டுப் பிரிவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ. 491 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த டிசம்பரில் 431 கோடியாகவும் ஜனவரியில் 625 கோடியாகவும் இருந்துள்ளது.