லாக்ஹீட் மார்ட்டினுக்கு ஒப்பந்தம்

பாரதத்தில் ஆத்ம நிர்பர், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், போர் விமானங்களை தயாரிக்க பாரத அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் பாரதத்தின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி இனி பாரதத்தில் விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை தயாரிப்பதுடன் ஏற்றுமதியும் செய்யமுடியும். முன்னதாக பிரான்ஸின் ரபேல் விமான நிறுவனமும் பாரதத்தில் போர் விமானம் தயாரிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.