சட்டசபை நூலகம்

சட்டசபை வளாகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கான நுாலகம் ஒன்று உள்ளது. தேவையான புத்தகங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அதை எடுத்துச் சென்று படிப்பார்கள். ஆனால் தற்போது சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துள்ள நிலையில் நுாலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்ற பல சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தகங்களை திரும்ப ஒப்படைக்கவில்லை. இவர்கள் மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்னபிக்கும்போது சட்டசபை செயலரின் தடையில்லா சான்று அவசியம். எனவே, அவர்கள் நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்கான பணத்தை அளித்தால் மட்டுமே நூலகத்தின் தடையில்லா சான்று கிடைக்கும்.